வியாழன், 30 செப்டம்பர், 2010

Maya Arulpragasam known as M.I.A.
Biggest thing in Asian Female Hip Hop.
Read about her and see her new music video
Bird Flu.

Click Here
http://www.voicetamil.com/index.php?option=com_content&task=view&id=122&Itemid=59
நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி
வாடும் வயிற்றை என்ன செய்ய
காற்றையள்ளித் தின்று விட்டு
கையலம்பத் தண்ணீர் தேட......
பக்கத்திலே குழந்தை வந்து
பசித்து நிற்குமே...- அதன்
பால்வடியும் முகம் அதிலும்
நீர் நிறையுமே..........
அதன் பால்வடியும் முகம்
அதிலும் நீர் நிறையுமே.........."

நிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை இந்த ஈழத்து எழுச்சிப்பாடல்கள். எண்பதுகளில் விடுதலைப் போராட்ட களத்தில் எல்.வைத்யநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் எழுச்சியோடு வெளிவரத் தொடங்கின. நம் கவிஞர்கள், நம் பாடகர்கள், நம் இசையமைப்பாளர்கள் என்று முற்று முழுதான ஈழத்துப் பரிமாணத்தோடு வெளிவரத் தொடங்கின. இது குறித்த விரிவான பதிவைப் பின்னர் தருகின்றேன்.
அப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான், "ஈழத்து இசைவாரிதி" வர்ணராமேஸ்வரன் அவர்கள். தொண்ணூறுகளில் இளையோராக இருந்த எம்மை ஈர்த்த வர்ணராமேஸ்வரன் அவர்களை, ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை ஒலி ஆவணப்படுத்தும் முயற்சி வாயிலாகச் சந்தித்தேன். இதோ அவர் தொடர்ந்து பேசுகின்றார்.

மேலும்: http://kanapraba.blo.../blog-post.html
ஏற்கனவே இவரைப் பற்றி அறிந்திருந்தாலும், மேலும் பல பாடல்களுக்குரிய குரல் இவருடையது எனக் கேட்கின்றபோது பிரமிப்பாக இருக்கின்றது.

முக்கியமாக "தாயகமண்ணின் காற்றே என்னில் வீசம்மா என்ற பாடல்.." அதை விட மாவீரர்தினப் பாடல்கள் என்பன. தொடர்ந்து உங்களின் குரலில் பாடல்கள் வரவேண்டும் இசைவாருதியே!தமிழீழத்தின் தலைமுறைக்கலைஞன் -வர்ண.ராமேஸ்வரன்
திருகோணமலையில் என் இளம்பபராயத்தில் எங்கள் வீட்டுக்கு வரும் அந்தப் பெரியவருக்கு முருகேசர் எனத் தொடங்கும் ஒரு பெயர். என் அப்பாவுடன் மிக நெருக்கமானவர். எனக்கு அவரை ஐயா எனக் கூப்பிட்ட ஞாபகம்தான் இருக்கு. தினமும் எங்கள் வீட்டுக்கு வரும் அவர், சிலவேளைகளில் அப்பாவுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் இசைவடிவங்கள் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பார். அவர்களது உரையாடலில் அம்மாவும். இடைக்கிடை சேர்ந்து கொள்வார்கள். அப்பாவிற்கு இசைக்கத் தெரியாது ஆனால் ரசிக்கத் தெரியும். அம்மா வயலின் வாசிக்கக் கூடியவர்கள். பெரியவர் சுருதிசேர்த்துப் பாடக்கூடியவர். இவர்களோடு எங்களுக்கு அருகாமையில் வசித்த நாதஸ்வர வித்துவானும் சேர்ந்துகொண்டால், அன்றைய மாலைப்பொழுது இசை அரட்டையாகவே இருக்கும். அப்படி இருந்த பொழுதுகளில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு ஒலிபரப்பில் சங்கீதக்கச்சேரியில் முக்கிய வித்துவான் ஒருவரின் கச்சேரி இடம்பெறப்போகின்றதென்று பொருள்.இரவு மீண்டும் அந்த ரசிகர்வட்டம் சேரும். எனக்கும் றேடியோக் கச்சேரி கேட்க ஆசைதான். ஆனால் இலங்கை வானொலியில் கர்நாடக இசைக்கச்சேரி இரவு பத்துமணிக்குப் பின்தான் ஆரம்பமாகும். கச்சேரி ஆரம்பமாகும் போது நானும் நித்திரையாகிவிடுவேன். மறுநாள் முந்தைய இரவுக்கச்சேரி பற்றி ரசிகர்வட்டம் கதைக்கும்போது, எனக்கு ஏமாற்றம் அழுகையாக வரும். அம்மா அடுத்த கச்சேரி கேட்கலாம் என்பார்.

காலவோட்டத்தின் பின் யாழ்ப்பாணத்தில், சின்ன வயதில் கேட்க முடியாது போன அந்த வித்துவானின் கச்சேரியைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. என் தோழியொருத்தி, நடன ஆசிரியை. அவளின் மாணவிகளினது நடன நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தாள். நிகழ்ச்சியில் அந்த வித்துவானின் கச்சேரியும் இருந்தது எனக்கு பெருவிருந்து.அவர்பாடப்பாட என்னுள் இனம்புரியா உணர்வொன்று எழுந்தெழுந்து மறைந்தது. ''பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே.. முருகா உன்னைத் தேடித்தேடி.. எங்கும்கானனே'' இது பெங்களுர் ரமணியம்மாளின் பாடலொன்று. கச்சேரியின் இடையில் இந்தப்பாடலும் அவர் பாடினார். ''முருகா! .. '' என விழித்து அவர் பாடின அந்தப்பாடல் இன்னும், இருபத்தைந்து வருடங்கள் கழித்தும், என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் இலங்கை வானொலிபுகழ் கர்நாடக சங்கீத வித்துவான் எம். வர்ணகுலசிங்கம்.


86 களிலென்று நினைக்கின்றேன். கொக்குவிலிலுள்ள என் நண்பரொருவர் சாயிபக்தர். அவர் வீட்டில் நடந்த ஒரு சாயி பஜனைக்கு என்னை வற்புறுத்தி அழைத்திருந்தார். அந்தப் பஜனையைப்பார்த்துக் கொண்டிருந்த என்னை மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் வெகுவாகக் கவர்ந்தான். என்னை மட்டுமல்ல இன்னும் பலரை அவன் இசை கவர்ந்திருந்தது என்பது பஜனையின் முடிவில் தெரிந்தது. அவன் நன்றாக பாடவும் செய்வான் என்பது எப்படியோ அந்தக் கூட்த்தில் தெரிந்து விட்டது. பலரும் விரும்பிக் கேட்க, கல்யாண வசந்த ராகத்தில், இயலிசைவாரிதி யாழப்பாணம் வீரமணிஐயர் எழுதிய கல்யாண வசந்த மண்டபத்தில்.. எனும் பாடலைப்பாடினான். மனதுக்குள் ஆசனமிட்டு அமர்ந்துவிட்ட அந்தக் குரலை சில வருடங்களுக்கு முன் புலத்தில், ஒரு தமிழ்க்கடையில் ஒலிக்கக் கேட்டேன். உரிமையாளரிடம் விசாரிக்க, அவர் ஒரு இறுவட்டினைத் தூக்கித் தந்தார். திசையெங்கும் இசைவெள்ளம் என்ற அந்த இசைஇறுவட்டில் பதினொரு பக்திப்பாடல்கள். பிரித்தானிய தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளியீடாக வந்த அந்த இறுவட்டிலுள்ள இசைக்கோலங்களை இசைத்தவன், 86களில் இசையால் எனைக்கவர்ந்த அந்த இளைஞன்தான் என்பதை அப்போதுதான் அறிந்தேன். அறிந்தது அதுமட்டுமல்ல. இப்பதிவின் முதல் பகுதியில் வரும் பெரியவர் முருகேசு ஐயா அவர்களின் மகன் வித்துவான் வர்ணகுலசிங்கம் அவர்களின் மகன்தான் ராமேஸ்வரன் என்பதும் அப்போது அறிந்ததே.

ஆம் வர்ண ராமேஸ்வரன், தமிழீழத்தின் தலைமுறைக்கலைஞன். இவன்குரலில் பல விடுதலைக்கீதங்கள் வெளிவந்ததாகவும் அறிந்தேன். ஆயினும் அவனது இந்த இறுவட்டின் இசைக்கோலங்களின் முதலாவது பாடலான ''இணுவையம்பதியில் இருந்திடும் கணபதி ..'' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. பாடல் என்னவோ பக்திப்பாடல்தான். ஆனால் பாட்டினூடு ஒரு செய்தி வரும். இது எமக்குப்புதிது. இருக்காத பின்ன? பாடலை எழுதியது யார்?.. புதுவை இரத்தினத்துரை.
தமிழீழக்குயில் -- பார்வதி சிவபாதம்

தமிழீழக்குயில் - பார்வதி சிவபாதம்
வலைப்பதிவு செய்யத் தொடங்கிய போதே இதை எழுதவேண்டுமென எண்ணியிருந்தேன். எழுதத் தொடங்கிய சில நாட்களில் திருகோணமலை பற்றிய பதிவை எழுதத் தொடங்கி, அது தொடராக நீண்டதால் இந்தப்பதிவு தாமதமாயிற்று. ஆயினும் இதைப்போல் வேறு சில பதிவுகளும் எழுதுகின்ற எண்ணம் உண்டு. அதற்கான காரணம், எங்கள் கலைஞர்கள் குறித்த ஒர் அக்கறை அல்லது பெருமிதம் எனக் கொள்ளலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபலமான இளம் கர்நாடக இசைவித்தகி ஒருவரை, வானொலி நிகழ்சிக்காகச் செவ்விகண்டு கொண்டிருந்தேன். அப்போது, இலங்கைக்கலைஞர்கள் பற்றிய கருத்தாடல் வந்தபோது, இலங்கையின் பிரபலமான இசைக்கலைஞர்கள் சிலர் பற்றி நான் குறிப்பிட்டேன். அந்தச் சந்தர்பத்தில் அவர் தனக்கு அவர்களைப்பற்றி எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டார். ஆனால் நான் குறிப்பிட்ட இசைக்கலைஞர்கள், தமிழகக் கலைஞர்களுக்கு இணையான தகமை மிக்கவர்கள். இலங்கை வானொலியுட்பட, வேறுபல தொடர்பூடக முன்னிலைக்கலைஞர்கள். அத்தகைய கலைஞர்கள் பற்றி அறிந்திராத அவர், மேலைத்தேய இசைக்கலைஞர்கள் பற்றியெல்லாம் வெகு ஆர்வமாகப் பேசினார். ஏன் அப்படி? எனக்குப் புரியவில்லை. தான் சார்ந்த துறையில், அதுவும் அண்டை நாட்டுக்கலைஞர்கள் பற்றி அறியாமைக்குக் காரணம் என்ன? ( ஆனால் பாகிஸ்தான் கலைஞர்கள் பற்றிக் கதைத்தார்.) இதேகேள்வியை எங்கள் ஈழத்துக் கலைஞர்களிடம் கேட்டிருந்தால், தமிழகக் கலைஞர்கள் பற்றிய நிறையச் சொல்வார்கள்.

எங்கள் ஈழத்துக்கலைஞர்கள் பற்றி, தமிழகக் கலைஞர்களும், தமிழக மக்களும், அறியாது போனதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். அவை பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதிலும் பார்க்க, உலகை ஒன்றிணைக்கும் இணையத்தில், எங்கள் கலைஞர்கள் பற்றிய சிறிய அறிமுகங்களையும், அவர்களது இசை வடிவங்களையும், அவ்வப்போது பதிவாகத் தருவது நல்லதென்றெண்ணினேன். எழுதுகின்றேன்.

திருமதி பார்வதிசிவபாதம்.
இவர் யாழ்ப்பாணத்து இசைக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். நீண்டகாலமாக மெல்லிசைப்பாடல்கள் பாடிவருபவர். பல்வேறு இசைக்குழுக்களிலும் பாடியவர். 80 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் , ஏனைய பிரதேசங்களிலும் நடைபெற்ற பல்வேறு கோவில் திருவிழாக்களிலும், கலைவிழாக்களிலும், நடைபெற்ற இசைக்கச்சேரிகளில் பங்கேற்றுக் கொண்டவர். இவரது தனித்துவமானகுரல்வளம், இவரது பாடல்களின் சிறப்பு. ஒரு காலத்தில் பார்வதி சிவபாதத்தின் இசைக்கச்சேரி இருப்பது, விழாவிற்கு பெருமையாகப் பேசப்பட்டதும் உண்டு.

விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த பின்னர், இவரது குரலில் , விடுதலைப்பாடல்கள் பல ஒலித்தன. கம்பீரமான அவரது குரலில், அவ்விடுதலைக் கீதங்கள் ஒருவித மிடுக்கோடொலித்தன என்றால் மிகையாகாது. தொடர்ந்து தமிழத்தேசியத்தின் இசைக்குரலாகப் பாடிடும் அவர், தேசிய விடுதலைப்போருக்காய் தன் குரலை மட்டுமல்ல, குழந்தைகளையும் கொடுத்து நிற்கும், தாய்.
அவரது குரலில் பல பாடல்கள் வந்திருந்த போதும் என்குப் பிடித்தது இந்தப் பாடல்தான். கடற்புலிகளின் ''நெய்தல்'' இசைத் தொகுப்பில் வந்த இப்பாடலுக்கு இசை அமைந்திருப்பவர், இசைவாணர் கண்ணன்.
எங்கள் ஈழத்து இசைக்குயிலின் குரலில் கடலலையே கொஞ்சம் நில்லு.....

Posted Image
மாயா அவர்களின் மற்றும் ஒரு செய்தி இங்கே அழுத்தவும்
M.I.A. Tamil Tigers and Global Revolution
:icon_idea:
http://www.brightdisorder.com/2008/03/12/m...bal-revolution/

Posted 12 March 2008 - 10:58 PM

Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image
பரமேஸ் - கோணேஸ்

Resized to 67% (was 1413 x 1078) - Click image to enlargePosted Image
MIA என அறியப்பட்ட மாயா அருள்பிரகாசம் அவர்களது கிராமிய விருதுக்கான பரிந்துரை செய்தி .இங்கே அழுத்தி பார்வை இடவும்

http://www.youtube.c...h?v=7sei-eEjy4g w.youtube.c...h?v=7sei-eEjy4g
Posted Image


“யேசுதாஸ் மிக அழகான குண்டுப் பெண் ஒருத்தியிடம் காதல் கொண்டிருந்தார். ஒரு கொடூரமானவன் அப்பெண்ணைக் கற்பழிக்க முயன்றான். அப்போது யேசுதாஸ் தனது வாளை எடுத்துச் சுழற்றி சண்டையிட்டு அவனைக் கொன்று விட்டார். நீ அவசியம் அந்த வாள் ‘ஃப்ளெயிட்டைப்’ பார்க்கவேண்டும்! என்னா ஒரு ஃப்ளெயிட்!வாள் சண்டையில் யேசுதாஸை அடிக்கவே முடியாது” தான் முதன் முதலாகப் பார்த்த சினிமாவின் கதையை வசீகரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தங்கன். ஊரில் சில்லறை வேலைகளைப் பார்த்துத் திரிந்துகொண்டிருந்த பதினாறு வயதான அவன் பள்ளிக்கூடம் சென்றதில்லை. பத்து வயதான எனக்கு ஊர்க்கதைகளையும் பாலியல் அறிவையும் தங்கு தடையில்லாமல் வழங்கிக் கொண்டிருந்தவன். வயல்களில் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்துக்கொண்டும் குன்றுகளில் துடலிப்பழங்களைப் பறித்துக்கொண்டும் நாங்கள் இருவரும் காடு கரையென ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தோம்.

அவன் சொல்லும் ஆர்வமிக்க தகவல்களை ரசித்துக்கொண்டும் நம்பிக்கொண்டும் இருந்த எனக்கு யேசுதாஸைப் பற்றிய அவனின் சினிமாக்கதை ஏமாற்றமளித்தது. யேசுதாஸ் சினிமாவில் வாள் சண்டை போடுகிறாரா? வாய்ப்பே இல்லை! ஆனால் தங்கன் அது யேசுதாஸ்தான் என்பதில் மிக உறுதியாக இருந்தான். ஏனெனில் அந்தப் படத்தில் அவர் பாடும் எல்லாப் பாடல்களுக்குமே ரேடியோவில் நாம் கேட்கும் யேசுதாஸின் அதே குரல்தான் என்றான். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மலையாள சினிமாவின் மிக அழகான கதாநாயகன் பிரேம் நஸீரைத் தான் யேசுதாஸ் என நினைத்துக் கொண்டிருக்கிறான் தங்கன். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. பிரேம் நஸீருடைய குரலும் யேசுதாஸின் குரலும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான். இப்பூமியில் மிகவும் அழகான மனிதனின் இனிமையான குரல் என்றால் அது யேசுதாஸின் குரல் அல்லாமல் வேறேது?

பல தலைமுறை மலையாளிகளைப் போல எனது பால்ய காலங்களும் யேசுதாசின் பாடல்களாலேயே நிரம்பியிருந்தது. அக்காலத்துக் காற்றலைகளை நிரப்பிய பெரும்பாலான மலையாள சினிமாப் பாடல்களிலும் பக்திப்பாடல்களிலும் ஒலித்த ஆண்குரல் யேசுதாஸாகவே இருந்தது. இசையைக் கேட்கத் தொடங்கிய நாட்களிலிருந்து யேசுதாஸின் குரலுக்கும் அவரது பாடும் முறைக்கும் நான் தீவிரமான ரசிகனாக இருந்தேன். யேசுதாசின் குரல் ஒலிக்காத ஒரு உலகத்தை எங்களால் யோசிக்கவே முடியவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி யேசுதாஸின் குரல் இல்லாத ஒரு இசையை, பாடல்களை எண்ணிப் பார்க்கக் கூட இயலாமல் இருக்கிறார்கள் பலகோடி மலையாளிகள். கேரளாவை ‘கடவுளின் சொந்த நாடு’ என்று சொல்வதைப் போலவே யேசுதாஸை ‘கடவுள் தந்த பரிசு’ என்றே அழைக்கிறார்கள் அவர்கள்.

1950களின் ஆரம்பத்தில் மெஹ்பூப், கோழிக்கோடு அப்துல்காதர், கே.எஸ்.ஜார்ஜ் போன்றவர்களின் குரல்களாலே மலையாள சினிமாப் பாடல்கள் அமைந்திருந்தன. பின்னர் கமுகர புருஷோத்தமன், கே.பி. உதயபானு போன்றவர்கள் பின்னணிப் பாடகர்களாக நுழைந்து பலவருடங்களாக நிலைத்திருந்தார்கள். ஆயினும் இவர்களில் எவரும் ஓரு உச்ச நட்சத்திரப் பாடகராக ஆகவில்லை. பின்னர் மலையாளத்துக்கு தெலுங்குப் பாடகர்களின் வரவு நிகழ்ந்து அவர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தது. 1953ல் மலையாள சினிமா பின்னணிப் பாடகராக நுழைந்த ஏ.எம்.ராஜா மலையாளத்தின் முதல் நட்சத்திரப் பாடகராக ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டார். பின்னர் வந்த பி.பி.ஸ்ரீனிவாஸும் மிகப்பெரிய அங்கீகாரத்தை அடைந்தார். ஆனால் இதெல்லாம் யேசுதாஸின் வருகை வரை மட்டும்தான் நீடித்தது. அறுபதுகளின் மத்தியில் ஆரம்பித்த யேசுதாஸின் இசை ராஜாங்கம் நாற்பது வருடங்களுக்கும் மேல் நீடித்தது. தற்போது எழுபது வயதைத் தாண்டிய அவரின் இடத்தை நிரப்ப யாராலேயும் இயலவில்லை.

மலையாள சினிமா துளிர்விட்டு வந்த 1940களின் கடைசியில் கடலால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சி பகுதியில் கட்டச்சேரி அகஸ்டின் ஜோசப் என்ற ஒரு பாடக நடிகர் இருந்தார். நாடகங்களில் சிறப்பாகப்பாடி நடிக்கும் திறன் கொண்டவராகவும் பொலிவான தோற்றமுடையவராகவும் இருந்தார் அவர். சினிமாவில் பாடி நடித்து திரையுலகின் ஒரு பிரபல நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தவர். 1950 களின் முதல் பகுதியில் சினிமாவில் பாடவும் நடிக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் திரையுலகில் எந்த வெற்றியும் அவருக்குக் கிடைக்கவில்லை. விரைவில் பாடி நடிக்கும் நடிகர்களின் தேவையே இல்லாத காலமும் வந்தது. ஐந்து குழந்தைகளுடன் மிகவும் சிரமம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார். அவருடைய முதலாவது மகனாக 1940ல் பிறந்த கட்டச்சேரி ஜோசப் யேசுதாஸ் என்பவரே பிறகு கே.ஜே.யேசுதாஸ் என்றழைக்கப்பட்டார்.

தனது மகனின் ஐந்தாவது வயதிலேயே அவனுடைய பாடும் திறமையை அறிந்து கொண்ட அகஸ்டின் ஜோசப், இசையின் ஆரம்ப பாடங்களைக் அவனுக்கு கற்றுக் கொடுத்தார். அவனது தனித்துவமான திறமையை உணர்ந்து கொண்ட அவர் தன்னால் அடையமுடியாத இடத்தை தன் மகன் பெறவேண்டுமென்ற எண்ணத்தோடு அவனுக்கு இசைப் பயிற்சிகளை வழங்கினார். பள்ளியிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடந்த பாடல் போட்டிகளில் அவரது மகனே சிறந்த பாடகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ள முயல்வதாக எல்லோராலும் பரிகசிக்கப்பட்டான் அவன்.

மிகுந்த ஏழ்மையிலேயே வளர்ந்தார் யேசுதாஸ். இசைப்படிப்புக்கான கட்டணம் செலுத்த முடியாததால் பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் இசைப் பள்ளிகளில் சாதனையான மதிப்பெண்களுடனும் இரட்டைத் தகுதி உயர்வுகளுடனும் தனது இசைப் பாடங்களைக் கற்றுத்தேர்ந்தார். உயர்கல்விக்காக திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், செம்பை வைத்திய நாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் மிகவிருப்பமான மாணவராக அவர் திகழ்ந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவரது தந்தையால் கல்விச்செலவுகளை வழங்க இயலாததால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். திருவனந்தபுரத்தில் தங்கும் வசதி இல்லாததால் செம்மங்குடியின் வீட்டின் கார் கொட்டகையில் மாதக்கணக்கில் படுத்துறங்கியதாக யேசுதாஸ் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.

குழாய்த் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு வாய்ப்புக்கள் தேடி சென்னையில் கணக்கில்லாத மைல்கள் நடந்து திரிந்ததையும் திறமையில்லாதவர் என பல இசையமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டதையும் பதிவு செய்திருக்கிறார். திருவனந்தபுரம் ஆல் இந்தியா ரேடியோ அவரது குரலை ஒலிபரப்புக்குத் தகுதியில்லாதது என நிராகரித்தது. கடைசியில் ஒருவழியாக 1962ம் ஆண்டு இயக்குனர் கே.எஸ். ஆண்டனி தனது கால்ப்பாடுகள் என்ற படத்தில் ஒரு சுலோகத்தின் நான்கு வரிகளைப் பாட வாய்ப்பளித்தார். இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையமைத்த அப்படத்தின் முக்கிய பாடகர் கே.பி. உதயபானு. யேசுதாஸின் வசீகரக் குரலைக் கவனித்த எம்.பி.ஸ்ரீனிவாசன் அப்படத்திலேயே ஒரு டூயட் பாடலையும் அவரைப் பாடவைத்தார். யேசுதாஸின் குரல் சினிமா வட்டாரங்களில் உடனடியாகப் பேசப்பட்டது. அதே வருடத்திலேயே மேலும் 7 படங்களில் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது! தனது மகன் வெற்றிப்பயணத்தைத் தொடங்கியிருப்பது பார்த்துவிட்டு 1964ல் காலமானார் அகஸ்டின் ஜோசப்.

ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் பாடியிருந்தாலும் மலையாளத்துக்கு அடுத்தபடியாக தமிழில்தான் யேசுதாஸ் நட்சத்திரப் பாடகராக மாறினார். ஆனால் மலையாளத்தைப்போல அவ்வளவு எளிதாக அவர் தமிழில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.1963 ஆம் ஆண்டில் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கி இசையமைத்த பொம்மை என்ற படத்தில்தான் முதன் முதலாகத் தமிழில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. “நீயும் பொம்மை நானும் பொம்மை" என்ற பாடல். அடுத்த தமிழ் படத்தில் வாய்ப்புக் கிடைக்க மேலும் ஒரு வருடம் காத்திருக்க நேர்ந்தது. காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் "என்ன பார்வை உந்தன் பார்வை" என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார்.

அடுத்த பத்தாண்டுகள் தமிழில் சிறப்பான பாடல்கள் ஏதும் இல்லாமல் சென்றது யேசுதாஸுக்கு. ஆனால் இதுதான் மலையாளத்தில் யேசுதாஸ் உச்சமான படைப்பூக்கத்துடன் பாடிய காலகட்டம்.

பின்னர் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் (1973) படத்தில் "தங்கத் தோணியிலே" பாடலைப் பாடினார். ஆனால் எம்.ஜி.ஆரின் "விழியே கதையெழுது '(உரிமைக்குரல்-1974) பாடல்தான் யேசுதாஸின் பெரிதும் ரசிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பாடல். அதன் பின்னர் எம் ஜி ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க (1975) படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடும் வாய்ப்பும் யேசுதாஸுக்குக் கிடைத்தது. அதில் “போய்வா நதியலையே”, “அன்புக்கு நான் அடிமை," "ஒன்றே குலமென்று பாடுவோம்” போன்ற வெற்றிபெற்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் "என்னை விட்டால் யாருமில்லை” (நாளை நமதே -1975), "இந்த பச்சைக் கிளிக்கொரு" (நீதிக்குத் தலைவணங்கு -1976) போன்ற பாடல்களையும் எம்.ஜி.ஆரின் நடிப்பில் பாடினார் யேசுதாஸ். சிவாஜி நடித்த படங்களிலும் பல வெற்றிப் பாடல்களை பாடினார். "மலரே குறிஞ்சி மலரே" (டாக்டர் சிவா), "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" (இமயம்) போன்றவை உதாரணம். ஆனால் இதை எல்லாம் விட அவள் ஒரு தொடர் கதை'(1978) படத்தில் இடம்பெற்ற "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு" பாடல்தான் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.

இளையராஜா தொடர்ந்து யேசுதாசுக்கு வாய்ப்புகள் வழங்கி வந்தார். பெரும் வெற்றிபெற்ற "பூவே செம்பூவே", "ஆராரிரோ பாடிய தாரோ", "ராஜராஜ சோழன் நான்", "தென்றல் வந்து என்னைத் தொடும்", "கண்ணே கலைமானே", "பூங்காற்று புதிதானது", "வெள்ளைப்புறா ஒன்று" என பல இளையராஜாப் பாடல்கள் யேசுதாஸின் குரலில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது. தமிழ் நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை எட்டு முறை வென்றிருக்கிறார் யேசுதாஸ். "அதிசய ராகம்" (அபூர்வ ராகங்கள்), "செந்தாழம் பூவில்" (முள்ளும் மலரும்), "கல்யாண தேனிலா" (மௌனம் சம்மதம்), "உன்னிடம் மயங்குகிறேன்" (தேன் சிந்துதே வானம்) போன்று வெகுசிறப்பாக ரசிக்கப்பட்ட யேசுதாஸ் பாடல்களின் வரிசை நீளமானது.

தெலுங்கிலும் வெகுவாகப் பாராட்டப்பட்ட பாடகராக மாறினார். பல சூப்பர்ஹிட் பாடல்களுடன், ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் ஆறு முறை பெற்று இருக்கிறார். மேகசந்தேசம் என்ற படத்தின் பாடல்களுக்காக அங்கு தேசிய விருதையும் பெற்றார் யேசுதாஸ். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் கன்னட சினிமாவிலும் பல பிரபலமான பாடல்களுடன், மாநில அரசின் ஐந்து விருதுகளும் கிடைத்திருக்கிறது யேசுதாஸுக்கு. சலீல் சௌத்ரி இசையமைத்த சின்னா நின்னா முத்தாடுவே (1977) படத்தில் இடம்பெற்ற “ஜோ ஜோலாலி” என்ற அவரது பாடல் கன்னடத்தின் என்றென்றும் விரும்பப்படும், மிகவும் புகழ்பெற்ற தாலாட்டுப் பாடலாகும்.

யேசுதாஸை இந்தி சினிமாவுக்குக் கொண்டு சென்றவரும் சலீல் சௌத்ரிதான். சலீல்தா இசையமைத்த ஆனந்த் மஹல் (1977) என்ற படத்திற்காக பதிவு செய்யப்பட்ட “நி ச க ம ப நி” பாடலே யேசுதாஸின் முதல் இந்திப்பாடல். சலில்தாவின் இசையிலமைந்த சோட்டி ஸி பாத் என்ற படத்தில் இடம்பெற்ற “ஜானேமன்” என்ற பாடல் தான் அவரது பிரபலமடைந்த முதல் இந்திப் பாடல். அதன் பின்னர் இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் பிரபலமான பல பாடல்களை யேசுதாஸுக்கு வழங்கி அவருக்கென ரசிகர் கூட்டத்தை அங்கு உருவாக்கினார். 1976ல் வந்த சிட் சோர் என்ற படத்தில் இடம்பெற்ற “ஜப் தீப் ஜலே ஆனா”, “தூ ஜோ மேரெ சுர் மே” போன்ற பாடல்கள் மறக்கமுடியாதவை. ஜெய்தேவும் அற்புதமான சில பாடல்களை யேசுதாஸின் குரலில் உருவாக்கினார். ஏன் பப்பி லஹிரி கூட “ஜித் நா கரோ”, “மானா ஹோதும்” போன்ற இனிமையான பாடல்களை யேசுதாஸுக்கு வழங்கினார்.

சலில்தாவே யேசுதாசை வங்காளத்துக்குக் கொண்டு சென்று கமல்ஹாசன் நடித்த வங்கப்படமான கொபிதா உள்ளிட்ட படங்களில் பல சிறப்பான பாடல்களை அவருக்கு அளித்தார். மேற்கு வங்க அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் ஒருமுறை பெற்றார் யேசுதாஸ். உலகில் மிக அதிகமாக பாடல்கள் பதிவு செய்யப்பட்ட பாடகர்களில் ஒருவர் யேசுதாஸாகும். கடந்த 48 வருடங்களில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது பாடலகள் பதிவாகியுள்ளன. ஏழுமுறை தேசிய விருதுகளையும், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். கேரளாவின் 16 மாநில அரசு விருதுகள் உட்பட மொத்தம் 34 மாநில அரசு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

திரைப்பாடல்களிலும் பக்திப் பாடல்களிலும் ஒரு உச்சநட்சத்திரமாக மாறிய பின்னர் யேசுதாஸ் தன்னை ஒரு கர்நாடக சங்கீதப் பாடகராகவும் முன்நிறுத்தினார். பல்வேறு கர்நாடக இசைக்கச்சேரிகளை உலகமெங்கும் நிகழ்த்தினார். இப்போதும் அவரது கச்சேரிகள் நிகழ்கின்றன. கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக்க முயன்றவர்களில் முதலிடத்தில் இருப்பது யேசுதாஸே என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

அவரது பக்திப்பாடல்கள் இதயத்தை உருகவைப்பவை என பல பக்தர்கள் கருதுகிறார்கள். வயதையும் காலத்தையும் கடந்த, என்றும் இனிமையான பாடகராகவே அவரை அவரது பெரும்பாலான ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

இந்தியாவில் தோன்றிய பாடகர்களில் ஒரு மிகச்சிறந்த ஆண்குரலுக்குச் சொந்தக்காரர் யேசுதாஸ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. திரை இசையில் யேசுதாசின் சாதனைகள் மகத்தானவை என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் கேரளாவில் பலர் நம்புவது போல உலகத்தில் பிறந்த பாடகர்களிலேயே மிகச்சிறந்தவர் யேசுதாஸா? இசையை விரும்பத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்வின் பின்னணி இசைபோல அமைந்த யேசுதாஸ் பாடல்களோடு வளர்ந்த எனக்கும் அவரது பாடல்களையும் பாடும்முறையையும் உணர்ச்சிவசப்படாமல் விலக்கிப் பார்ப்பது இலகுவானதாக இருந்ததில்லை. ஆனால் அப்படி விலக்கி பார்க்கும்போதெல்லாம் சங்கடமான முடிவுகளுக்குத் தான் நான் வந்து சேர்ந்ந்திருக்கிறேன்.

யேசுதாஸின் சோகப்பாடல்கள் கேரளாவின் ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. தன் பாடல்கள் வழியாக யேசுதாஸ் கேரளாவின் வரலாற்றுச் சோகத்தை வளர்த்தெடுத்தார் என்று கூட சொல்லலாம். காதலோடு சம்பந்தப்பட்ட மெல்லிய துயரம், வேதனை, பிரிவு, காதல் தோல்வி மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் எல்லாம் யேசுதாஸின் பாடும்முறையில் அற்புதமாக வெளிப்பட்டது. ஆனால் அவரது பாடல்கள் எல்லாவற்றிலும் துயரத்தின் இழையொன்று அடிநாதமாய் ஓடிக் கொண்டேயிருக்கும்.

மகிழ்ச்சியான உணர்வுகளையோ, கொண்டாட்டமான மனநிலையையோ வெளிப்படுத்துவதற்கான பாடலென்றாலும் அதிலும் மெலிதான சோகம் பரவுவதை நாம் உணர முடியும். இப்படியாக சந்தோஷமான மனநிலையை வெளிப்படுத்த வேண்டிய பாடல்கள் அவரது பாடும் தொனியால் சோகமான பாடலைப் போல் மாறிவிடும். உதாரணமாக, "ராஜராஜ சோழன் நான்" (ரெட்டைவால் குருவி), "உன் பார்வையில் ஓராயிரம்" (அம்மன் கோவில் கிழக்காலே) போன்ற பாடல்களை கவனமாக கேட்டுப் பாருங்கள். ஏன் அவரது டப்பாங்குத்து பாடல்களான "அடி கானக்கருங்குயிலே" (பூந்தோட்ட காவல்காரன்), "வச்சுக்கவா ஒன்ன மட்டும்" (நல்லவனுக்கு நல்லவன்) போன்றவற்றை மீண்டும் கேட்டுப்பாருங்கள். மகிழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் வர்ணிக்கும் பாடல்களில் சோகத்தின் கீற்றொன்று இழையோடிச் செல்வதை நிச்சயமாக உணர முடியும். இனிய இசை துயரமானதே என்று சொல்வார்கள். ஆனால் விதவிதமான உணர்ச்சிகள் வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட திரைப்பாடல்கள் அனைத்துமே துயரப்பாடல்களாக மாறுவதும் ஒரு பெரும் துயரம் தானே!

தமிழ் சினிமா இசையமைப்பில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரேயொரு சாதனையாளர் மட்டுமே கோலோச்சி வந்திருக்கின்றனர். ஆனால் மலையாள சினிமா இசையின் பொற்காலம் என்பது மிகச்சிறந்த பல இசையமைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பங்குபெற்றதாகவே அமைந்திருந்தது. ஆனால் அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை யேசுதாஸின் குரலில்தான் வெளி வந்தது. அதனால் அந்தப் பாடல்களின் இசை அமைப்பில் இருந்த பன்முகத்தன்மை பாடல்களின் வெளிப்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.

யேசுதாஸின் குரலும் ஆளுமையும், திரை இசை ரசிகர்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமும் காரணமாக, யேசுதாஸின் பாடும்முறை மட்டுமே சிறந்தது என்ற ஒரு பிரமை மலையாள இசையை ஆக்ரமித்தது. அவரது கம்பீரமான குரலும் பாடல் முறையின் சோக பாவமும் எல்லாப் பாடல்களுக்கும் பாடகர்களுக்கும் அளவுகோளானது. மற்ற பாடகர்கள் உள்ளே வராமல் போனதற்கும், வந்தவர்கள் பிரபலமடையாமல் போனதற்க்கும் இதுதான் காரணம். பிறகுவந்த பாடகர்கள் எல்லோருமே யேசுதாஸின் பாணியிலேயே பாடுவதைக் கேட்கவேண்டிய நிலைமைதான் மலையாளப் பாடல் ரசிகர்களுக்கு நேர்ந்தது. ஒவ்வொரு வளர்ந்து வரும் பாடகர்களும் அவரை நகலெடுப்பதற்கு மட்டும் தான் முயற்சி செய்தார்கள். சோகமோ வலியோ அல்லாத பிற உணர்வுகள் மலையாளப் பாடல்களுக்கு அன்னியமாகி விட்டது.

அவரது முந்தைய காலப் பாடல்களில், குறிப்பாக பாபுராஜ், சலில்தா போன்றவர்கள் இசையமைத்த பாடல்களில் உணர்ச்சிபூர்வமான ஆழங்களும், நுட்பமான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பாவனைகளும் நிரம்பியிருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அவரது பாடல்களில் இருந்த நுட்பமான வேறுபாடுகளின் இனிமை இல்லாமல் போனது. காலங்கள் செல்லச் செல்ல அவரது பாடல்கள் முழங்கும் குரல் மட்டுமாக மாறி விட்டது. ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக்க வேண்டிய ஒவ்வொரு சுரமும், ஒரே தொனியில் ஒலித்து இறுக்கமானதாக வெளிப்பட்டது.

தனது பாடல்களில் இடம்பெறும் ஒவ்வொரு சுரமும் ஒரே மாதிரியான ஒலி அதிர்வுடன் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பிய தேவராஜன் போன்ற இசை அமைப்பாளர்களின் தாக்கமும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். யேசுதாஸ் கர்நாடக இசையில் அதீத கவனம் செலுத்தத் தொடங்கிய பின்னர் இப்படி ஓங்கி ஒலிக்கும் பாடும்முறையே அவரது நிரந்தரமான பாணியாகி விட்டது.

அவரது கர்நாடக இசையோ ஆழ்ந்த கர்நாடக இசை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவுமில்லை. தீவிர கர்நாடக செவ்வியல் இசை ரசிகரும் விமர்சகருமான ஆர்.ராமகிருஷ்ணன் யேசுதாஸின் கர்நாடக சங்கீதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் “யேசுதாஸ் மிகச்சிறந்த குரல்வளம் உடையவர். ஆனால் குரல் மட்டுமே இசையல்ல. நல்ல குரல் என்பது நல்ல கையெழுத்தைப் போன்றதுதான். கையெழுத்தை அழகாக எழுதுபவர் அம்மொழியின் விற்பன்னர் என்று அர்த்தமல்ல. மொழி தனக்கென ஒரு இலக்கணத்தையும், பின்பற்றவேண்டிய பல விதிமுறைகளையும் கொண்டுள்ளது. இலக்கிய அறிவு பாலர் பள்ளி மாணவர்களால் மதிப்பிடப்படுவதல்ல. அதே மாதிரி செவ்வியல் இசைப்பாடகர்களின் பாடும் முறை இசையறிவு கொண்டவர்களாலும், அதைப் புரிந்துகொண்டவர்களாலுமே மதிப்பிட முடியும். கர்நாடக இசையைப் பற்றி எதுவுமே அறியாதவர்களே ‘யேசுதாஸ் மிகச்சிறந்த சங்கீத வித்வான்’ என்று சொல்வார்கள்” என்றார்.

யேசுதாஸும் தன்னுடைய கர்நாடக சங்கீதத்தைப் பற்றி உயர்வான தன்னம்பிக்கையுடன் இருந்ததில்லை எனப்படுகிறது. “என்னுடைய இசையைக் கர்நாடக சங்கீதமாக கருதமுடியாதென்றால் அதை ‘பாரதீய சங்கீதம்’ என அழைத்துக் கொள்ளுங்கள்” என்றுகூட அறிவித்திருக்கிறார் அவர். கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக்கும் முயற்சிகளும் தேவை இல்லாதவை. செவ்வியல் இசை முற்றிலுமாக ஒருபோதும் ஜனரஞ்சகமாகப் போவதில்லை. அது தேவையுமில்லை.

மலையாளம் அல்லாத பிற மொழி வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதில் யேசுதாஸ் பிழைசெய்து கொண்டேயிருந்தார் என்பது அவரது இன்னுமொரு பலவீனம். தென்னிந்திய மொழிகளில் அடைந்த இடத்தை இந்தியில் அவர் அடையமுடியாமல் போன தன் காரணம் கூட உச்சரிப்பில் இருந்த இந்தக் குறைபாடே. யேசுதாஸின் மலையாள உச்சரிப்பு ஈடு இணையற்றது என்று சொல்வார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் மலையாளத்தில்கூட ‘ஸ்னேஹம்’, ‘ப்ரஹ்மம்’ போன்ற வார்த்தைகளை ‘ஸ்னேகம்’ ‘ப்ரம்ஹம்’, என்று தான் அவர் உச்சரிக்கிறார்.

2004ல் அவருடைய பாடல்களை மேடையில் பாடுவதற்கு ராயல்டி தொகை தரவேண்டும் என்று புது தலைமுறை பாடகர்களிடம் கட்டளையிட்டு சர்ச்சைக்கு ஆளானார் யேசுதாஸ். “யேசுதாஸின் பாடல்களை இசைநிகழ்ச்சிகளில் பாடுவதாக இருந்தால் அதற்கு ராயல்டி தொகை தரவேண்டும்” என யேசுதாசின் மகன் வினோத் யேசுதாஸ் நிர்ப்பந்திப்பதாக பின்னணிப் பாடகர் உன்னிமேனன் கூறியபோது பெரும் சர்ச்சை உருவானது. மலையாளத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யேசுதாஸின் பாடலை அவருக்கு ராயல்டி செலுத்தாமல் பாட அனுமதி மறுக்கப்பட்டதாக மது பாலகிருஷ்ணன் என்ற பாடகர் குறிப்பிட்டார். இந்த சர்ச்சையினால் யேசுதாஸ் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தார்கள். இதனால் முதன்முதலாக கேரளத்தில் அவரது புகழுக்கு சரிவு ஏற்பட்டது. பின்னர் அவர் இதுகுறித்த தனது அறிவிப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுபோல் மலையாளத் திரை இசையை முற்றிலுமாகத் தன் வியாபாரமாக்கவும் ஒரு கட்டத்தில் முயன்றிருக்கிறார் யேசுதாஸ். 70களில் அவர் ஆரம்பித்த இசை நிறுவனமான தரங்கிணி ரெக்கார்ட்ஸுக்கு இசை வினியோக உரிமை அளிக்காத திரைப்படங்களிலோ இசைத்தட்டுகளிலோ பாட அக் காலகட்டத்தில் அவர் முற்றிலுமாக மறுத்தார்.

யேசுதாஸின் குரல் இசைத்தன்மை குறைந்ததாக மாறிப் பலகாலம் ஆகிவிட்டது. தொண்ணூறுகளின் மத்திக்குப் பிறகு சிறப்பாகப் பாடிய பாடல்களை அவரிடமிருந்து நாம் கேட்டது குறைவே. அவரது சோகப் பாடல்கள்கூட ஒரு முழக்கமாக மாறிப்போனது. ஒரு முறை யேசுதாஸ் வெளிப்படையாக ‘லதா மங்கேஷ்கரின் குரல் முந்தைய காலங்களில் இருந்த இனிமையை இழந்துவிட்டது. எனவே அவர் பாடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் தன் பாடும் குரல் மோசமானதாக மாறிவிட்ட பின்னரும் அவர் பாடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை! சமீபத்தில் வந்த பழசி ராஜா படத்தின் ‘ஆதியுஷஸ் சந்த்ய’ போன்ற பாடல்களை உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள்.

மதம், கடவுள் சார்ந்த அவருடைய நிலைப்பாடுகள் கூட நிச்சய மற்றதாகவே தோன்றுகிறது. எந்தக் கேள்விக்குப் பதில் அளித்தாலும் அதை மதம் சார்ந்த உரையாடலுக்குள் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் அவர். மதத்துடனோ கடவுளுடனோ எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துச் சொல்வதாக இருந்தாலும் இறுதியாக அதில் கடவுளை இணைத்து விடுவார். “எது நடந்தாலும் கடவுளால் முன் தீர்மானிக்கப்பட்ட தாய் இருக்கிறது” என்ற கோட்பாட்டில் தீவிர நம்பிக்கை உடையவராக இருப்பவர் அவர். அப்படியென்றால் ஏன் இன்னும் குருவாயூர் கோவிலுக்குள் செல்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்? அவரைக் குருவாயூர் கோவிலுக்குள் நுழையவிடாத உயர்ஜாதி ஆதிக்கமும், மதவெறியும் கூட அவர் நம்பும் ஜகதீஸ்வரனால் முன் தீர்மானிக்கப்பட்டதுதானே?

நான் இப்போதும் யேசுதாஸின் அற்புதமான பல பாடல்களின் ரசிகனே. ஆனால் நாம் முன்பு ரசித்த, நம்முள் தாக்கத்தை ஏற்படுத்திய இலக்கியங்களை மறுவாசிப்புச் செய்வது போல, திரைப்படங்களை மறுபார்வைக்கு உள்ளாக்குவது போல, ஒரு காலகட்டத்தில் நம்மை பாதித்த இசையையும், பாடல்களையும் உணர்ச்சிவசப்படாமல் மீண்டும் கூர்ந்து கேட்பதும் நமது கலை உணர்வுகளும் மனித உணர்வுகளும் மேம்பட அவசியமானதேயாகும்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

இளையராசா இசையமைத்த தமிழ் படங்களின் பட்டியல்01. 6 லிருந்து 60 வரை 02. 16 வயதினிலே 03. 24 மணி நேரம் 04. 100வது நாள் 05. ஆகாய கங்கை 06. ஆளப்பிறந்தவன் 07. ஆளுக்கொரு ஆசை 08. ஆண்பாவம் 09. ஆனந்த் 10. ஆனந்த கும்மி 11. ஆனந்த ராகம் 12. ஆணழகன் 13. ஆண்டான் அடிமை 14. ஆராதணை 15. ஆத்மா 16. ஆவாரம்பூ 17. ஆயிரம் நிலவே வா 18. ஆயிரம் வாசல் இதயம் 19. ஆபூர்வ சகோதர்கள் 20. ஆபூர்வ சக்தி 369 21. அச்சாணி 22. அடுத்த வாரிசு 23. அடுத்தடுத்து ஆல்பர்ட் 24. ஆப்ரிக்காவில் அப்பு 25. அகல் விளக்கு 26. அக்னி நட்சத்திரம் 27. அக்னி பார்வை 28. அலை ஓசை 29. அலைகள் ஓய்வதில்லை 30. ஆளப்பிரந்தவன் 31. அமைதிப்படை 32. அம்பிகை நேரில் வந்தாள் 33. அம்மன் கோவில் கிழக்காலே 34. அம்மன் கோவில் திருவிழா 35. அமுத கானம் 36. அன்பே ஓடி வா 37. அன்பே சங்கீதா 38. அன்பின் முகவரி 39. அன்புச் சின்னம் 40. அன்பு கட்டளை 41. அன்புக்கு நான் அடிமை 42. அன்புள்ள மலரே 43. அன்புள்ள ரஜனிகாந்த் 44. அஞ்சலி 45. அன்னை பூமி 46. அன்னை ஒரு ஆலயம் 47. அன்னக்கிளி 48. அண்ணன் 49. அண்ணனுக்கு ஜெய் 50. அன்னையே ஆணை 51. அந்த ஒரு நிமிடம் 52. அந்த சில நாட்கள் 53. அந்தபுரம் 54. அரங்கற்றவேளை 55. அரண்மனைக் கிளி 56. அர்ச்சணை பூக்கள் 57. அறுவடை நாள் 58. ஆதாரம் 59. அதிரடி படை 60. அதிர்ஷ்டம் அழைக்கிறது 61. அதிசய பிறவி 62. அது ஒரு கனாக்காலம் 63. ஆட்டோ ராசா 64. அவள் அப்படித்தான் 65. அவள் ஒரு பச்சைக்குழந்தை 66. அவர் எனக்கே சொந்தம் 67. அவதாரம் 68. அழகே உன்னை ஆராதிக்கிறேன் 69. அழகி 70. அழகிய கண்னே 71. பால நாகம்மா 72. பைரவி 73. பார்வதி என்னை பாரடி 74. பத்ரக்காளி 75. பகவதிபுரம் ரெயில்வே கேட் 76. பரணி 77. பரதன் 78. பாரதி 79. புவனா ஒரு கேள்வி குறி 80. பிள்லை 81. பிரம்மா 82. கேப்டன் பிரபாகரன் 83. சக்கலத்தி 84. சக்கரை பந்தல் 85. சந்திரலேகா 86. சத்ரியன் 87. சின்ன தேவன் 88. சின்ன துரை 89. சின்ன கவுண்டர் 90. சின்ன ஜமின் 91. சின்ன கண்ணம்மா 92. சின்ன குயில் பாடுது 93. சின்ன மாப்பிள்ளை 94. சின்ன பசங்க நாங்க 95. சின்ன ராமசாமி பெரிய ராமசாமி 96. சின்ன தாய் 97. சின்ன தம்பி 98. சின்ன வாத்தியார் 99. சின்ன வீடு 100. சின்னப்ப தாஸ் 101. சின்னவர் 102. சிம்பரத்தில் ஒரு அப்புசாமி 103. சிட்டுக்குருவி 104. டிசம்பர் பூக்கள் 105. தீபம் 106. தெய்வ வாக்கு 107. தேசிய கீதம் 108. தேவன் 109. தேவர் மகன் 110. தேவதை 111. தேவி சிறிதேவி 112. தாயம் ஒன்று 113. தனுஷ் 114. தர்மா 115. தர்ம பத்தினி 116. தர்ம சீலன் 117. தர்ம துரை 118. தர்ம யுத்தம் 119. தர்மம் வெல்லும் 120. தர்மத்தின் தலைவன் 121. துர்கா தேவி 122. எச்சில் இரவுகள் 123. ஈர விழ காவியங்கள் 124. ஈரமான ரோஜவே 125. ஈட்டி 126. ஏஜமான் 127. எல்லாம் இன்பமயம் 128. எல்லாம் உன் கைராசி 129. எல்லாமே என் ராசாதான் 130. என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு 131. என் ஜவன் பாடுது 132. என் கிட்ட மோதாதே 133. என் மன வானில் 134. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் 135. என் ராசாவின் மனசிலே 136. என் செல்வமே 137. என் உயிர் கண்ணம்மா 138. என் உயிர் தோழன் 139. எனக்காக காத்திரு 140. எனக்கு நானே நீதிபதி 141. எனக்குள் ஒருவன் 142. என்றும் அன்புடன் 143. எங்க முதலாளி 144. எங்க ஊரு காவல்காரன் 145. எங்க ஊரு மாப்பிள்ளை 146. எங்க ஊரு பாட்டுக்காரன் 147. எங்க தம்பி 148. எங்கையோ கேட்ட குரல் 149. என்ன பெத்த ராசா 150. என்னை பார் என் அழகை பார் 151. என்னை விட்டு போகாதே 152. எதிர் காற்று 153. எத்தனை கோணம் எத்தனை பார்வை 154. எழை ஜhதி 155. எழுமலையான் மகிமை 156. எழுதாத சட்டங்கள் 157. பிரண்ட்ஸ் 158. காயத்ரி 159. கர்ஜனை 160. கீதாஞ்சலி 161. கிராமத்து அத்தியாயம் 162. கிராமத்து மின்னல் 163. கோபுர வாசலிலே 164. கோபுரங்கள் சாய்வதில்லை 165. குணா 166. குரு சிஷ்யன் 167. ஹலோ யார் பேசுரது 168. ஹேய்ராம் 169. ஆணஸ்ட்ராஜ் 170. ஹவுஸ்புல் 171. ஐ லவ் இந்தியா 172. இளையராகம் 173. இளையவன் 174. இளமை இதோ இதோ 175. இளமை ஊஞ்சலாடுகிறது 176. இளமைக் காலங்கள் 177. இளமை கோலம் 178. இல்லம் 179. இந்திரன் சந்திரன் 180. இன்று நீ நாளை நான் 181. இன்று போய் நாளை வா 182. இங்கையும் ஒரு கங்கை 183. இனிய உறவு பூத்தது 184. இன்னிசை மழை 185. இரண்டில் ஒன்று 186. இரட்டை ரோஜh 187. இரவு பூக்கள் 188. இரும்பு பூக்கள் 189. இசை பாடும் தென்றல் 190. இதயக் கோவில் 191. இதயம் 192. இதயத்தை திருடாதே 193. இதயத்தில் ஓர் இடம் 194. இது எப்படி இருக்கு 195. இது நம்ம பூமி 196. இவண் 197. ஜல்லிக் கட்டு 198. ஜனவரி 1 199. ஜப்பானில் கல்யாணராமன் 200. ஜானி 201. ஜோதி 202. ஜீலி கணபதி 203. காக்கை சிறகினிலே 204. காக்கி சட்டை 205. காளி 206. காசி 207. காதல் தேவதை 208. காதல் கவிதை 209. காதல் பரிசு 210. காதல் ரோஜாவே 211. காதல் சாதி 212. காதலுக்கு மரியாதை 213. காத்திருக்க நேரமில்லை 214. காறினிலே வரும் கீதம் 215. காற்றிற்கு என்ன வேலி 216. காவலுக்கு கெட்டிக்காரன் 217. கடல் மீன்கள் 218. கடலோர கவிதைகள் 219. கடமை கண்ணியம் கட்டுப்பாடு 220. கடவுள் 221. கடவுள் அமைத்ததா மேடை 222. கை கொடுக்கும் கை 223. கை வீசம்மா கை வீசு 224. கைராசிக்காரன் 225. கலைஞன் 226. கலி காலம் 227. கல்லுக்குள் ஈரம் 228. கல்யாண கச்சேரி 229. கல்யாண ராமன் 230. காமராஜ் 231. கண் சிவந்தால் மண் சிவக்கும் 232. கண்களின் வார்த்தைகள் 233. கண்மணி 234. கண்மணி ஒரு கவிதை 235. கண்ணா உன்னை தேடுகிறேன் 236. கண்ணத்தாள் 237. கண்ணன் ஒரு கைக்குழந்தை 238. கண்ணத் தொறக்கிறேன் சாமி 239. கண்ணே ராதா 240. கன்னி ராசி 241. கன்னித் தீவு 242. கண்ணல் தெரியும் கதைகள் 243. கண்ணுக்கொரு வண்ண கிளி (ரிலீஸ் இல்லை) 244. கண்ணுக்கு மை அழகு 245. கண்ணுக்குள் நிலவு 246. கரகாட்டக்காரன் 247. கரகாட்டக்காரி 248. கரையேல்லாம் செண்பகபு 249. கரிமேடு கருவாயன் 250. கரிசக்காட்டு புவே 251. கற்பூர முல்லை 252. கரும்பு வில் 253. கருவெல்லாம் பூக்கள் 254. கஸ்தூரி மான் 255. கட்ட பஞ்சாயத்து 256. கட்டளை 257. கட்டுமரக்காரன் 258. கவலைப்படாதே சகோதரா 259. கௌரி மான் 260. கவிக்குயில் 261. கவிதை மலர் 262. கவிதை பாடும் அலைகள் 263. கழுகு 264. கேளடி கண்மணி 265. கேள்வியும் நானே பதிலும் நானே 266. கெட்டி மேளம் 267. கிளிப் பேச்சுக் கேட்கவா 268. கிழக்கே போகும் ரயில் 269. கிழக்கு வாசல் 270. கிழக்கும் மேற்க்கும் 271. கோடை மழை 272. கொக்கரக்கோ 273. கோலங்கள் 274. கொம்பேறி மூக்கன் 275. கொஞ்ச பேசலாம் 276. கோயில் காளை 277. கோயில் புறா 278. கோழி கூவுது 279. கிருஸ்ணன் வந்தான் 280. கும்பக்கரை தங்கையா 281. கும்பக்கோணம் கோபாலு 282. கும்மிப் பாட்டு 283. குங்குமச் சிமிழ் 284. குட்டி 285. குற்றப் பத்திரிக்கை 286. குவா குவா வாத்துக்கள் 287. லேடிஸ் டெய்லர் 288. லட்சுமி 289. எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் ஸ்டேசன் 290. மாமியார் வீடு 291. மாப்பிள்ளை 292. மாப்பிள்ளை வந்தாச்சு 293. மாரியம்மன் திருவிழா 294. மாவீரன் 295. மாயாபாஜார் 296. மது 297. மதுரை வீரன் எங்கசாமி 298. மகளிர் மட்டும் 299. மகனே மகனே 300. மகுடம் 301. மகுடி 302. மகாநதி 303. மகராசன் 304. மைக்கேல் மதன காமராஜன் 305. மக்களாட்சி 306. மலயேறும் மம்பட்டியான் 307. மல்லுவேட்டி மைனர் 308. மண் வாசணை 309. மண மகளே வா 310. மனதில் உறுதிவேண்டும் 311. மனைவி ரெடி 312. மனைவி சொல்லே மந்திரம் 313. மனம் வரும்புதே உன்னை 314. மனசெல்லாம் 315. மனசுக்கேத்த மாப்பிள்ளை 316. மணிக்குயில் 317. மணிப்புர் மாமியார் 318. மனித ஜாதி 319. மனிதனின் மறுப்பக்கம் 320. மஞ்சள் நிலா 321. மன்னன் 322. மந்திர புன்னகை 323. மரகத வீணை 324. மருத நாயகம் (ரீலிஸ் இல்லை) 325. மருத பாண்டி 326. மீண்டும் கோகிலா 327. மீண்டும் ஒரு காதல் கதை 328. மீண்டும் பராசக்தி 329. மீரா 330. மெல்லத் திறந்தது கதவு 331. மெல்லப் பேசுங்கள் 332. மெட்டி 333. மோகமுள் 334. மூடு பனி 335. மூன்றாம் பிறை 336. மௌன ராகம் 337. மௌனம் சம்மதம் 338. மிஸ்டர் பாரத் 339. முதல் மரியாதை 340. முதல் வசந்தம் 341. முடிவில்லா ஆரம்பம் 342. முகம் 343. முகத்தில் முகம் பார்க்கலாம் 344. முள்ளும் மலரும் 345. மும்பை எக்ஸ்பிரஸ் 346. முந்தானை முடிச்சு 347. முரட்டு கரணங்கள் 348. முரட்டுக் காளை 349. முதல் இரவு 350. முத்து எங்கள் சொத்து 351. முதலமைச்சர் ஜெயந்தி 352. மை டியர் குட்டிச்சாத்தான் 353. மை டியர் மார்த்தாண்டம் 354. நாடோடி தென்றல் 355. நாடோடி பாட்டுக்காரன் 356. நாளை உனது நாள் 357. நான் மகான் அல்ல 358. நான் பாடும் பாடல் 359. நான் போட்ட சவால் 360. நான் சந்தித்த சட்டம் 361. நான் சிவப்பு மனிதன் 362. நான் வாழ வைப்பேன் 363. நானே ராஜா நானே மந்திரி 364. நாங்கள் 364. நானும் ஒர் இந்தியன் 365. நானும் ஓர் தொழிலாளி 366. நாட்டுப்புறப் பாட்டு 367. நாயகன் 368. நடிகன் 369. நல்ல நாள் 370. நல்ல தம்பி 371. நல்லதொர் குடும்பம் 372. நல்லது நடந்தே தீரும் 373. நல்லவனுக்கு நல்லவன் 374. நந்தவனெத் தேரு 375. நண்டு 376. நதியை தேடி வந்த கடல் 377. நட்பு 378. நீ சிரித்தால் தீபாவளி 379. நீ தானா அந்த குயில் 380. நீ தொடும் போது 381. நீங்கள் கேட்டவை 382. நீதியின் மறுப்பக்கம் 384. நெஞ்சத்தை கிள்ளாதே 385. நேரம் நல்ல நேரம் 386. நெருப்புக்குள் ஈரம் 387. நெற்றிக்கண் 388. நிலவே முகம் காட்டு 389. நிலவு சூடுவதில்லை 390. நினைக்க தெரிந்த மனமே 391. நினைவெ ஓரு சங்கீதம் 392. நினைவெல்லாம் நித்யா 393. நினைவுச் சின்னம் 394. நிறம் மாறாதா பூக்கள் 395. நியாயம் 396. நிழல் தேடும் நெஞ்சங்கள் 397. நிழல்கள் 398. ஓடி விளையாடு தாத்தா 399. ஓ மனமே மனமே 400. ஒன்னா இருக்க கத்துக்கணும் 401. ஊமை விழிகள் 402. ஊரெல்லாம் உன் பாட்டு 403. ஊரு விட்டு ஊரு வந்து 404. ஒப்பந்தம் 405. ஒரே முத்தம் 406. ஒரே ஒரு கிராமத்திலே 407. ஒரு கைதியின் டைரி 408. ஒரு நாள் ஒரு கனவு 409. ஒரு ஓடை நதியாகிறது 410. ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி 411. ஒருவர் வாழும் ஆலயம் 412. பாடாத தேனீக்கள் 413. பாடு நிலாவே 414. பாடும் பறவைகள் 415. பாலூட்டி வளர்த்த கிளி 416. பாண்டி நாட்டு தங்கம் 417. பாண்டித்துரை 418. பாண்டியன்பார்த்தால் பசு 419. பாரு பாரு பட்டணத்தை பாரு 420. பார்வதி என்னை பாரடி 421. பாச மழை 422. பாசப் பறவைகள் 423. பாட்டு பாடவா 424. பாட்டு வாத்தியார் 425. பாட்டுக்கு நான் அடிமை 426. பாட்டுக்கொரு தலைவன் 427. பாயும் புலி 428. படிச்ச புள்ள 429. படிக்காத பண்ணையார் 430. படிக்காதவன் 431. பகல் நிலவு 432. பகலில் பௌர்ணமி 433. பகலில் ஒர் இரவு 434. பணக்காரன் 435. பங்காளி 436. பன்னீர் புஷ்பங்கள் 437. பட்டாக்கத்தி பைரவன் 438. பட்டணம் போகலாம் வா 439. பயணங்கள்
Make This Site My HomePage

திரைப்படம்
(Movies & Songs)

Thiraivirunthu
Tubetamil
Lankamovie
Mayuraki
Tamiltorrents
Tamilterminal
Yoga05
raagaswaram
Tamilchain
Cineclipz
lktamilan
Directtami
Tamilstdenis
Itncafe
Paraparapu
Tamilmovieworld
Tamilsweet
Tamilgsm
Tamilgold
Sutharsan
Tamilthaalam
Tamilflame
Tamilbird
Dishtamil
Chuchukuttie
Dance-Boys
Itntube.com
CineDish
Tamilxtream
Vaddakkachchi
tamilblood
Tamilfilmz
Tamilrythm
Admiretamil
Tamilpeek
Tamiljothy.net
Tmvz
Kollymovies
KunduPapa
Galattatime
htnmovies
Aarampam
Hoodmusicnetworks
Tamilclipz
Tamildivx
Lovetack
devinetamil

janarthan

Tamilsee

பாடல்கள்
(
MP3 இணையங்கள்)

Raaga
Chennai Tamil
Eelam Mp3
Shaiva Audio
My Tamil Mp3
Mp3 Axe
Tamil Wire
Tamil Paddu
Oru Web
M Lanka
Good Lanka
Hi2 FM
Tamil Ent..
Tamil GSM
Cooldls
Tamil Strings
Hi2 Web
NK Dreams
All Indian
Tamil Jothy
Thesam
Indo Mp3s
Hi2world
Good Lanka
Kathal Mp3 Desam
Online Tamil Mp3
Tamil Rocks
Tamil Mp3 Site
Central Musiq
Tamil Musica
Inimai
Old Tamil Songs
Hummaa
Dishant
Vanni Net
மோகன்குமார்
தூள்
ஐகரன்
ஓசை
தமிழ் பீற்
தமிழ் மசாலா
தமிழ் கிரவுண்ட்ஸ்
தமிழ்ப்பூங்கா
இந்தியா கிளிட்ஸ்
தமிழ் மசாலா
தமிழ் எம்பி3 வேர்ல்ட்
கோல்டன் தமிழ்
இசைத் தென்றல்
கீதம்
தமிழ் எம்பி3 சிட்டி
நடிகைகள் &

வியாழன், 23 செப்டம்பர், 2010

சு வர்ணலதாவின் வாரலாற்றுத் தடம்....

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு பாடகிக்காக எழுதப்படும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும்.
1973 ம் வருடம் இந்தியாவின் கேரளாவில் உள்ள பாலக்காடு எனும் இடத்தில் இவர் செருக்குட்டி மற்றும் கல்யாணி அகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிறந்த ஆர்மோனிய வாசிப்பாளர் ஆவார். 1987 காலப்பகுதியில் சென்னைக்க குடிபெயர்ந்த இவர் எம்எஸ் விஸ்வநாதனால் அடையாளம் காணப்பட்டு இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் 1987 ம் ஆண்டு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் பாடிய பாரதியார் பாடலாகும் (சின்னம் சிறு கிளியே). ஆனால் சிலர் இது 1982 ல் வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடலுக்காக (போறாளே பொன்னுத்தாயி) சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.
1990ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... பாடல்தான் இவரை பிரபலப்டுத்தியது. அதேபோல அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... பாடல் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது.
இவர் திருமணம் செய்யாமலேயே இறுதிவரை வாழ்ந்து நுரையிரல் கோளாறால் சென்னை மருத்துவ மனையொன்றில் எமைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

இவர் ரகுமானுக்காக பாடிய சில பாடல்கள்..

எவனோ ஒருவன் (அலைபாயுதே 2000)
சொல்லாயோ சோலைக்கிளி (அல்லி அர்ஜினா 2001)
ஒரு நாள் ஒரு பொழுது (அந்திமந்தரை 1995)
குச்சி குச்சி (பொம்பெய் 1995)
உசிலம் பட்டி (9ஜென்டில்மென் 1993)
அக்கடாண்ணு (இந்தியன் 1996)
மாஜா மச்சின்த (இந்தியன் 1996)
முன்னேறு தான் ( இந்திரா 1995)
அஞ்சாதே ஜீவா (ஜோடி 1999)
அண்ணா உன் தொழில் (ஜோடி 1999)
சொல்லு அன்பே (ஜோடி 1999)
எந்தன் வானில் (காதல் வைரஸ் 2002)
முக்காலா (காதலன் 1994)
காதல் எனும் (காதலர் தினம் 1999)
சின்யோரே (கன்னத்தில் முத்தமிட்டால் 2002)
போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா 1993)
மெட்ராச (மே மாதம் 1994)
மெல் இசையே (மிஸ்டர் ரோமியோ 1996)
உழுந்து விதைக்கயில (முதல்வன் 1999)
சிட்டக்குருவி (பரசுராம் 2003)
மொட்டு விட்டதா (பவித்திரா 1994)
ஹெய் ராமா (ரங்கிலா 1995)
லக்கி லக்கி ( ரட்சகன் 1997)
மேக்கூறி பூக்கள் (ரட்சகன் 1997)
கும்மி அடி ( சில் என்று ஒரு காதல் 2006)
காதல் யோகி (தாளம் 1999)
குளிருது (தாஜ்மகால் 1999)
பூங்காற்றிலே ( உயிரே 1998)
ராக்கோழி ரெண்டு (உழவன் 1993)
யே முத்து பாப்பா (வண்டிச்சோலை சின்ராசு 1994 )

இவர் பாடிய பாடலில் என்னை மிகவும் கவர்ந்தது இதுதான். சத்திரியன் திரைப்படத்தில் பாணுப்பிரியாவிற்காக பாடியிருப்பார். மிகவும் அழகான காட்சியமைப்புக் கொண்ட அந்தப் பாடலை கீழே உள்ள

இது தான் பாடல் வரிகள்..

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா


பாடல் பெயரை சொடுக்குவதன் மூலம் ரசிக்கலாம். அதற்கு முன் வாக்குக்குரியா பொத்தானை சொடுக்கி அதனூடு போய் வாக்கிட்டு விட்டு பாட்டை பாருங்கள்

மாலையில் யாரோ மனதோடு பேச

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

சனி, 26 டிசம்பர், 2009

இளையராஜா
Albums [Instrumental/Non-Film Outputs]YearAlbumYearAlbum1986How to Name it1988Nothing but wind2005Thiruvasagam2007The Music Messiah2008Manikantan Geet Mala2009Namratha Ke Sagar[edit] TamilYearAlbumYearAlbum1978Sigappu Rojakkal, 16 Vayathinelle, Achaani, Aval Appadithaan, Aval Oru Pachai Kuzhanthai, Bairavi, Chitukuruvi, Illamai Oonjal Aadukirathu, Ithu Eppadi Irukku, Kaatrile Varum Geetham, Kannan Oru Kai Kuzhanthai, Kilake Pogum Rail, Maariyamman Thiruvizha, Mullum Malarum, Priya, Sattam En Kayil, Sonnathu Nee Thaanaa, Thiru Kalyanam, Thirupura Sundari, Thiyaagam, Vaazha Ninaiththaal Vaazhalaam, Vatathukkul Sathuram1979Aarulirunthu Arupathuvarai, Agal Vilaku, Anbe Sangeetha, Annai Oru Aalayam, Azhage Unnai Aaradhikeeran, Chakalathi, Dharma Yutham, Kadavul Amaitha Medai, Kalyana Raaman, Kavarimaan, Lakshmi, Mugaththil Mugam Paarkkalaam, Muthal Iravu, Naan Vazhavaipen, Nallothor Kudumbam, Niramaraatha Pookal, Odi Vilaiyaadu, Thaaththaa, Pagalil Oru Iravu, Pattakathi Bairavan, Ponu Ooruku Puthusu, Poonthalir, Puthiya Vaarpugal, Rosappo Ravikaikaari, Sonathe Neethana, Uthiri Pookal, Vetrikku Oruvan1981Raja Paarvai, Tik Tik Tik, Paneer Pushpangal1983Moondram Pirai1985Muthal Mariyathai, Sindhu Bhairavi1986Mouna Raagam, Punnagai Mannan1987Nayakan1989Rajadhi Raja, Siva, Maappillai, Varusham 16, Apoorva Sagodharargal, Vetri Vizha , Karagatakkaran1990Pandian, Adhisaya piravi , Chinna Thambi1991Thalapathi, Guna1992Mannan , Chinna thaayi1997Kadhalukku Mariyadhai1999Sethu, Hey Ram2002Azhagi2003Pithamagan2004Virumaandi2005Adhu Oru Kana Kaalam,Mumbai Express2008Dhanam, Inimale Nngathane, Uliyin Osai, Ajantha, kangalum kavipadudhe2009Naan Kadavul, Nandhalala, Azhagar Malai, Valmiki, Kadhal Kadhai, Jagan Mohini, Kannukulle, Mathiya Chennai,Pazhassi Raja[edit] HindiYearAlbumYearAlbum1983Sadma1985Kamagni1989Mahadev1990Appu Raja1991Anjali, Aadmi Aur Apsara1996Aur Ek Prem Kahani, Saza-E-Kala Pani, Chhaila1999Hey Ram, Velu Nayakan2001Lajja2005Mumbai Xpress, Divorce: Not Between Husband and Wife2006Shiva 20062007Cheeni Kum2009Paa, Chal Chalein, Happi,2010Mausam, SRK2011[edit] MalayalamYearAlbumYearAlbum1978Aaru Manikkoor, Vyamoham1980Dooram Arike1981Garjanam1982Olangal, Aa Rathri, Aalolam1983Sandhyakku Virinja Poovu, Oomakkuyil, Pinnilavu1984My Dear Kuttichathan, Mangalam Nerunnu, Onnanu Nammal, Unaroo1985Yatra1986Poomukhapadiyil Ninneyum Kathu, Kaveri1988Moonnam Pakkam1989Adharvam, Chaithram, Season1991Anaswaram, Ente sooryaputhrikku1992Pappayude Swantham Appoos, Aparatha1993Jackpot1996Kaalapani, Man of the Match1997Guru, Kaliyuunjalu, My dear Kuttichathan, Oru Yathramozhi1998Anuragakottaram, Manjeera dhwani2000Kochu Kochu Santhoshangal, Kallu Kondorupennu2001Friends2003Manasinakkare, Nizhalkoothu2005Achuvinte Amma, Ponmudipuzhayorathu, Twinkle twinkle Little star2006Rasathanthram, Pachakkuthira2007Vinodayathra, Sooryan2008Innathe Chinthaavishayam, S M S2009Bhagyadevatha, Pazhassi Raja[edit] TeluguYearAlbumYearAlbum1976Bhadrakali1978Ajeyudu, Vayasu Pilichindhi1979Amma Evarikaina Amma, Erra Gulabeelu, Kalyana Ramudu, Nuvve Naa Srimathi, O Inti Katha, Oorvasi Neeve Naa Priyasi, Pancha Bhoothalu, Yugandhar1980Guru, Kala Rathri, Kali, Mayadari Krishnudu, Pasidi Moggalu1981Amavasya Chandrudu, Chinnari Chitti Babu, Kotha Jeevithalu, Madhura Geetham, Mouna Geetham, Seetha Koka Chilaka, Tik Tik Tik1982Nireekshana, Poola Pallaki, Prema Sangamam, Radha Madhavi, Ragamalika, Vasantha Kokila1983Abhilasha, Mantrigari Viyyankudu, Pallavi Anupallavi, Rajkumar, Saagara Sangamam, Seethakokachiluka, Sitaara1984Amma Nannu Deevinchu, Challenge, Jalsa Rayudu, Khaidi Veta, Love Story, Merupu Dadi, Noorava Roju, Raaga Bandham1985Aalaya Deepam, Aatma Bandhuvu, Anveshana, Chilipi Yavvanam, Darja Donga, Dongala Vetagadu, Jalsa Bullodu, Jwala, Oka Radha Iddaru Krishnulu, Prema Sasthram, Preminchu Pelladu, Swathi Muthyam, Udaya Geetham1986Aalapana, Kiratakudu, Ladies Tailor, Manchi Manasulu, Mouna Ragam, Mr. Bharath, Rakshasudu, Sri Shirdi Saibaba Mahathyam1987Aaradhana, Kedi, Maa Inti Krishnudu, Maharshi, Nayakudu, Rendu Tokala Pitta, Sankeertana, Sister Nandini1988Aasthulu Antasthulu, Aakhari Poratam, Abhinandana, Chinna Babu, Gharshana, Marana Mrudangam, Rakthabhishekam, Rudraveena, Sathya, Sri Kanaka Mahalakshmi Recording Dance Troupe, Swarna Kamalam, Varasudochadu, Vaddante Pelli1989Apoorva Sahodarulu, Ashoka Chakravarthy, Bharyalu Jagratha, Chettu Kinda Pleader, Dance Master, Geethanjali, Gopala Rao Gari Abbayi, Kokila, Prema, Prema Geetham, Rudranetra, Shiva (film), Swathi Chinukulu, Tiger Siva1990Anjali, Bobbili Raja, Guru Sishyulu, Idem Pellam Baboi, Jagadeka Veerudu Athiloka Sundari, Kondaveeti Donga, Kshatriyudu, O Paapa Laali, Patnam Vachina Monagadu, Police Adhikari, Police Diary, Thoorpu Sindhooram1991Aditya 369, April 1 Vidudala, Chaitanya, Coolie No. 1, Keechurallu, Michael Madana Kama Raju, Nirnayam, Stuartpuram Police Station, Surya IPS1992Aa Okkati Adakku, Aswamedham, Chamanthi, Chanti, Chinarayudu, Dalapati, Detective Narada, Dharma Kshetram, Guna, Hrudayam, Killer, Kshatriya Putrudu, Priyathama, Meera, Moratodu Naa Mogudu1993Amma Koduku, Kunti Putrudu, Mahanadi, Repati Rowdy, Rowdy Zamindar, Toli Muddu1994Aadavallaku Maatrame, Samaram, Veera1995Sati Leelavati1996Kurradu Baboi1997Chinnabbayi1998Prema Kavyam1999Antahpuram, Gayatri, Preminchedi Endukamma, Time200020012002Ninu Choodaka Nenundalenu2003Avuna, Sambhu2004Pothuraju, Siva Putrudu2005Mumbai Express2006Hope, Shiva 20062007Anumanaspadam, Sunny2008Malleppuvvu2009Jaganmohini, Nenu Devudni, Om Shanthi[edit] KannadaYearAlbumYearAlbum1978Maathu Tappada Maga1981Geeta, Janma Janmada Anubandha, Nee Nanna Gellalare1983Accident, Pallavi Anu Pallavi1984Bharjari Bete1996Nammoora Mandara Hoove, Shivasainya1998Hoomale2004Namma Preetiya Ramu2007Aa dinagalu2009Nannavanu, Bhagyadha Balegara, Prem Kahani,Suryakanthi[edit] References